
நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளும்படி பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது. மேலும் தங்களை சுய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் நல்லது என அவர் கேட்டுக் கொண்டார். தற்போது தினசரி நோய்தொற்று எண்ணிக்கை 6,000மாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது ஆகவே பொதுமக்கள் தங்களது பாதுகாப்பு கருதி வெளியே நடமாடமல் வீட்டிலேயே இருப்பது நல்லது என அவர் கேட்டுக் கொண்டார்.
