
நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக சிலாங்கூர் மாநில மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார் நாளுக்கு நாள் நாட்டில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. மக்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆகவே நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநில மக்கள் மீது அக்கறை கொண்டு 56 சட்டமன்ற தொகுதிகளிலும் நோய்த்தொற்று பரிசோதனையை இலவசமாக நடத்திக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
