
கடுமையான மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நீர்ப் பெருக்கி னால் கிள்ளான் தெலுக் காடோங் வட்டார மக்கள் குடியிருப்பு ப் பகுதியில் நேற்று வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்ந்த வெள்ளத்தினால் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு க்கு உள்ளாகின. ஜாலான் முகமட் யாஸ்மின் பகுதியில் நேற்று காலை 8.21 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு ப் படை இயக்குநர் நோரஸாம் தெரிவித்தார்.வெள்ளப் பிரச்சினை யை எதிர் கொள்ள கோத்தா ராஜா தீயணைப்பு நிலைய த்தின் மீட்புப் படையினர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் எவரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வில்லை என்று நோரஸாம் குறிப்பிட்டார்.
