
பகாங் காரக் சபாய் சட்டமன்ற தொகுதியில் ஏழை மக்களுக்கும் நடுத்தர வசதி குறைந்தவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.
கஷ்டப்படும் ஏழைகளுக்கு உணவு கூடைகள், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், தனித்து வாழும் தாய்மார்களுக்கும் நிதி உதவியும் வழங்கி கொண்டிருக்கிறார். அந்த வகையில் காரக்கில் தனித்து வாழும் மாது ஒருவர் சொந்தமாக வியாபாரம் செய்வதற்கு உரிய பொருட்களை வாங்கி கொடுத்திருக்கிறார். இந்த மாதுவின் கண்ணீரைத் துடைத்த காமாட்சியின் செயலை பலரும் பாராட்டுகிறார்கள்.
