
ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரத்தை பிரகடனப்படுத்த வேண்டும் என மேன்மை தங்கிய ஜோகூர் Sultan Ibrahim Sultan Iskandar கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பின்னணியும் ஆராயப்படும் என்று அவர் தெரிவித்தார். அனைத்து ஆட்சிக் குழு உறுப்பினர்களும் போலீஸ் மற்றும் MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் ஆராயப்படுவார்கள். ஜோகூரின் புதிய மந்திரிபுசார் Onn Hafiz Ghazi, தன்னை சந்தித்தபோது சுல்தான் இதனை தெரிவித்தார்.
