
பகாங் குவாந்தானில் உள்ள ஒரு சமூக நல இல்லத்தில் ஒரு சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடையே 4 வெள்ளி தொடர்பாக ஏற்பட்ட சிக்கலில் சிறுவனின் உயிர் பிரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த சமூக நல இல்லத்தில் சம்பந்தப்பட்ட இருவருமே தங்கியிருந்த நிலையில், 16 வயது இளைஞன், தன்னுடைய 4வெள்ளியை இறந்துபோன சிறுவன் திருடி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தான்.
எனினும், அந்த சிறுவன் சிறிதும் பொருட்படுத்தாததை அடுத்து, ஆத்திரமடைந்த அந்த இளைஞன் அச்சிறுவனை அடித்து கழுத்தை நெறித்துள்ளதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
