
🔊 Listen to this news in Tamil, select the news & wait 5 sec
12-ஆவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநில நிருவாகத்தை மக்கள் கூட்டணியிடம் இழந்தாலும் தேசிய முன்னணி மத்திய கூட்டரசாங்கம் அந்த மாநிலத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் தெரிவித்தார்.
வெ.1.2 பில்லியன் செலவில் அணை விரிவாக்கம், 2-ஆவது பால கட்டுமானம் எனஅந்த மாநிலத்திற்கான மறுகட்டுமானத் திட்டங்களின் மூலம் 95% வரையிலான கடனைக் குறைப்பதற்கு தேசிய முன்னணி அரசு உதவி செய்தது.
பினாங்கு மாநிலத்தின் வளர்ச்சியில் மத்தியக் கூட்டரசு எப்பொழுதும் அக்கறை செலுத்திவந்தது என்று தெரிவித்துள்ள நஜீப், சீன மக்களையும் அம்னோ தலைவர்களையும் சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக பினாங்கிற்கு சென்றுள்ளார்.
