
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 26 இந்தோனேசியக் கள்ளக்குடியேறிகளை கடல் அமலாக்க நிறுவனத்தின் அதிகாரிகள் கைது செய்தனர்.
இங்கு காப்பார் சுங்கை ஜங்குட் வழியாக நாட்டிற்குள் நுழைந்த போது கைது செய்யப்பட்டனர் என அமலாக்க நிறுவனத்தின் சிலாங்கூர் மாநில இயக்குனர் முகமட் ரோஸ்லி காசிம் தெரிவித்தார்.
இந்தோனேசியாவிலிருந்து படகு மூலமாக வந்த 17 வயதிலிருந்து 53 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரையும் சிறப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்ததாக சொன்னார்
