
சரவாக் மாநில பெண்கள்-குழந்தை-சமூக நல அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாத்திமா அப்துல்லா, கூச்சிங்கில் உள்ள ஒரு பெண்கள் மறுவாழ்வு மையத்தில் பள்ளிக்கூடம் நிறுவப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கூச்சிங், தாமான் ஸ்ரீ புத்ரி, தெலாகா ஆயர் சாலையில் உள்ள இளம் பெண் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில்தான் ஒரு பாடசாலை நிறுவப்பட வேண்டும் என்கிறார்.
சரவாக் மாநிலம் ஏற்கெனவே மருத்துவமனைகளிலும் சிறைச்சாலைகளிலும் பள்ளிகளைக் கொண்டிருப்பதன் அடிப்படையில் இந்த மறுவாழ்வு மையத்திலும் கல்விச்சாலை உருவாக்கப்பட வேண்டும் என்ற புதுமைக் கருத்தை வலியுறுத்தி உள்ளார்.


