
பருவநிலை மாற்றத்தினால் எழும் வெப்ப அளவு உயர்வால் மலேசியக் கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்தும் இதன் விளைவாக மலேசியக் கடற்கரைகள் காணாமல் போகும் ஆபத்து எழுந்துள்ளது என்றும் சூழியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கெனவே, பினாங்கு மாநிலத்தில் உள்ள மணற்பாங்கான பாசிர் பாஞ்சாங் கடற்கரை உள்ளிட்ட 15% கடற்கரைகள் நாட்டில் காணாமல் போய்விட்டன.
1.5 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால், 2040-ஆம் ஆண்டுகளுக்குள் மலேசியக் கடற்கரைகள் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


