
ஜோகூரில் வெ.5லட்சத்துக்கும் கூடுதலான மதிப்புடைய பட்டாசுகளை பறிமுதல் செய்த பொது நடவடிக்கை பிரிவின் அதிகாரிகள் இந்தோனேசிய ஆடவர் உட்பட நான்கு பேரையும் வளைத்துள்ளனர்.
இவர்கள், வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக பொது நடவடிக்கைப் பிரிவு அதிகாரி Dimin Awang தெரிவித்தார்.
மூவார், கெம்பாஸ் வட்டாரங்களில் விநியோகிப்பதற்காக பக்கத்து நாட்டிலிருந்து பெரிய அளவில் பட்டாசுகளை கடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் வட ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைமையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் Dimin Awang தெரிவித்தார்.



