
சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை 12 சட்டமன்றத் தொகுதிகள் கோவிட் 19 இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 44 சட்டமன்ற தொகுதி தொகுதிகளிலும் சோதனை தொடரும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை மற்றும் செலங்கா செயலி வாயிலாக அடையாளம் காணப்பட்ட நோய்த் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே இந்த இலவச பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் சட்டமன்ற தொகுதி ரீதியாக நடத்தப்படும் இந்த பரிசோதனை இயக்கத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதோடு பரிசோதனையில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச மருத்துவ பரிசோதனை தொடரும் என்று அவர் கூறினார்
