
கிளானா ஜெயா வில் இரண்டு எல் ஆர் டி ரயில்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் காயமடைந்த 213 பயணிகளுக்கு இலவசமாக சட்ட உதவிகள் வழங்க கெஅடிலான் இளைஞர் பிரிவு முன்வந்து இருப்பதாக அதன் தேசிய உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் .தெரிவித்தார் .

விபத்தில் காயமடைந்தவர்களுக் கு தலா 1,000 வெள்ளி நிதி உதவி வழங்கப்படும் என்று prasarana நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிதி மிகவும் குறைவானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் நாங்கள் இலவச சட்ட உதவிகளை வழங்க முன் வந்திருக்கிறோம் என்றார் அவர்.
