
நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கிய மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் குறித்து உள்துறை அமைச்சகமும் மனிதவளத் துறையும் ஆழமாக ஆய்வு செய்து வருகின்றன.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், மலேசியாவுக்கு இன்னும் அதிகமான ரோஹிங்கிய அகதிகள் வரக்கூடும். அதனால், இதைத் தடுக்க விரிவான ஆய்வும் நடவடிக்கையும் தேவை என்பதையும் புத்ராஜெயா கவனத்தில் கொண்டுள்ளது.



