
ஏறக்குறைய 72,000 ஹெக்டர் அல்லது சிங்கப்பூர் அளவிலான காட்டுப் பகுதி, தீபகற்ப மலேசியாவில் அழிக்கப்படவிருப்பதாக, ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு கூறியுள்ளது.
சில காட்டுப் பகுதிகள் விற்பனைக்கு சென்றுள்ள வேளையில் பல்வேறு காரணங்களுக்காக காட்டினை அழிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக Rimba Disclosure Project அமைப்பு தெரிவித்தது.
காடுகள் விற்பனைக்கு வந்திருப்பது தொடர்பில் விசாரணை நடத்தும்படி இதற்கு முன்பு தமது தரப்பு மாநில அதிகாரத்துவ தரப்பினரைக் கேட்டுக் கொண்டிருந்தது; எனினும் அதன் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அந்தச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
