
MySejahtera செயலியின் பயன்பாடு, அதன் தரமேம்பாடு, அரசாங்கம் அதை தேசிய அளவில் அறிமுகப்படுத்திய விதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் குழப்பம் தருவதாக இருப்பதுடன் இதுகுறித்து யார் அல்லது எந்தத் தரப்பினர் முடிவு செய்தனர் என்பதிலும் தெளிவில்லை என்று பொது கணக்குக் குழு-PAC தலைவர் வோங் கா வோ கூறியுள்ளார்.
கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கோவிட்-19 கண்காணிப்பு செயலியான MySejahtera-ஐ உருவாக்க KPISoft Sdn Bhd-ஐ எந்த குறிப்பிட்ட அதிகாரி அல்லது நிதரப்பு நியமித்தது என்பதில் பெரும் குழப்பம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதன் தொடர்பில் ஒப்பந்தம் உள்ளிட்ட எந்தத் தரவையும் அரசு வழங்கவில்லை என்றும் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
