
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுக்கு எதிராக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
“2018 இல் அவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவதற்குமுன், தன்மீதான நீதிமன்ற வழக்கைப் பற்றி விவாதிக்க அவரைச் சந்தித்ததாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு மகாதீர் மன்னிப்பு கேட்பதுடன் இழப்பீடும் தரவேண்டும்” என்று கேட்டு ஜாஜிட் ஹமிடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
