
சதுப்பு நிலப் பகுதியிலுள்ள கால்வாயில் மறைந்திருந்த சட்டவிரோத குடியேறிகளில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டிற்குள் வந்தடைந்த அந்த சட்டவிரோத குடியேறிகள் அதிகாரிகளால் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக Banting, kampung Tali Air பகுதியில் மறைந்திருந்தபோது பிடிபட்டனர்.
14 ஆடவர்கள் மற்றும் ஐந்து பெண்களைக் கொண்ட அந்தக் கும்பல் படகு மூலம் அண்டை நாட்டிலிருந்து இங்கு வந்தடைந்த சில மணி நேரத்திற்குப் பின் அதிகாலை மணி 3 .30 அளவில் கைது செய்யப்பட்டதாக பொது நடவடிக்கைக் குழுவின் அதிகாரி Superintendent Rizal Mohamed கூறினார்.
