
நோன்பு பெருநாளுக்காக அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கான 330,000 இருக்கைகளுக்கான பேருந்து பயணச் சீட்டுகள் விற்று முடிந்துவிட்டதாக தீபகற்ப மலாய் விரைவு பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் Laili Ismail தெரிவித்தார்.
நாளை முதல் மே மாதம் 8ஆம் தேதிவரை 680 பஸ்கள் சம்பந்தப்பட்ட 8,500 பயணங்களுக்கான பயணச் சீட்டுகள் விற்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். அதே வேளையில் அதிகமான தேவை ஏற்பாட்டால் கூடுதலான பஸ் பயணங்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் தங்கள் தரப்பு தயாராக இருப்பதாகவும் Laili Ismail தெரிவித்தார்.



