
ஓர் இரும்பு கலனுக்குள் அமர வைக்கப்பட்டு, உயரே கட்டப்பட்ட கயிற்றால் பள்ளிக்கூட மாணவர்கள் ஆற்றின் அக்கரைக்கு இழுத்து செல்லப்படும் அவலக் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருக்கின்றது.
இந்தச் சம்பவம் சபாவில் நிகழ்ந்ததாக நம்பப்படும் வேளையில், இதுபோன்ற நிலை பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு ஏற்பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக, மூடா கட்சி தலைவர் Syed Saddiq Abdul Rahman கூறியுள்ளார்.
மேலும், அப்பகுதியில் இருந்த தொங்கும் பாலம் அறுந்து இரு மாதங்கள் ஆகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
