
மக்கள் ராயாவிற்கு சொந்த ஊர்களுக்கு திரும்பவிருப்பதை அடுத்து, வீடு புகுந்து திருடும் குற்றச் செயல்களைத் தடுக்க, போலீசார் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்கவுள்ளனர்.
குறிப்பாக, பெட்டாலிங் ஜெயாவில் குடியிருப்பு பகுதிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்தார்.
நாளை தொடங்கி மே 8-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும் Op Selamat நடவடிக்கையை முன்னிட்டு 264 போலீஸ் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
