
நீர்மூழ்கிக் கப்பல் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்களா என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வினவியுள்ளார்.
பிரான்சிடமிருந்து 120 கோடி அமெரிக்க டாலர் அல்லது வெ.520 கோடி விலையில் நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் மலேசியர்கள் ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்படுமா என இதற்குமுன் மூடா கட்சிகூட கோரிக்கை எழுப்பியிருந்தது.
இரண்டு Scorpene நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் Agosta நீர் மூழ்கிய கப்பலை மலேசியா கொள்முதல் செய்தபோது அப்போது தற்காப்பு அமைச்சராக டத்தோஸ்ரீ நஜீப் இருந்தார். மலேசியாவிற்கு நீர்மூழ்கி கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸில் 9 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
