
திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், தனது பெண்ணை வேறு ஒரு உறவுக்காரருக்கு மணப்பெண்ணின் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பங்கரா என்ற கிராமத்தில் ஏப்ரல் 22ம் தேதி ஒரு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான சுபநிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை மணமகள் மற்றும் உறவினர்கள் மணமகனின் வருகைக்காக காத்திருந்தனர்.
இரவு 8 மணி வரை மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்நிலையில், மணமகனும் நண்பர்களும் போதையில் நடனமாடிக் கொண்டிருந்த தகவல் கிடைத்ததும், திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்கார இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
