
நாடு குறுந்தொற்று நிலையை எட்டியுள்ளதால், கொரோனா தொடர்பிலான SOP பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றுதல் நலம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.
தங்களை தற்காத்துக் கொள்வதுடன், மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இந்த அடிப்படை விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து பாதுகாப்பான வாழ்க்கையை மக்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
