
மலேசிய ஒலிம்பிக் மன்றம்-OCMஇன் மருத்துவ மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.சீமா, தேசிய சைக்கிள் வீரர் Datuk Mohd Azizulhasni Awang ஏன் மருத்துவப் பணியாளர்களால் காந்த அதிர்வு இமேஜிங் ஸ்கிரீனிங் எனப்படும் MRI பரிசோதனைக்கு பரிந்துரை செய்ய அறிவுறுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் Datuk Mohd Azizulhasni Awang, 2024 ஒலிம்பிக் போட்டியில் நாட்டிற்கு தங்கம் பெற்றுத் தரக்கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுகிறார். இந்த நிலையில் அவருக்கு, மெல்பெர்ன் Epworth Richmond மருத்துவமனையில், கடந்த 21-ஆம் நாளில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
34 வயதான அவர், மாரடைப்பு அபாயத்தை எதிர்கொண்டிருந்த நிலையில் உடனடி இருதய சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
