25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பிகேஆர் தேர்தல் களத்தில் -மக்கள் தலைவர் டாக்டர் குணராஜ்

அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் பாராட்டும் வகையில் தொடர்ந்து மக்கள் பணியாற்றிவரும் மக்கள் தலைவர் டாக்டர் ஜி.குணராஜ், பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பொறுப்பை நோக்கி முன்னேறி வருகிறார்.

அரசு, பி40- தரப்பு மக்கள் என்று வகைப்படுத்தியுள்ள பிரிவில், இந்தியர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். மக்கள் தொகையில், மூன்றாவது இடத்தில் இருந்தாலும், பி-40 பிரிவில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

இந்தத் தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்தாலும் அவை சம்பந்தப்பட்ட மக்களுக்கு முழு அளவில் சென்றடைவதில்லை. இதைத் தவிர்ப்பதற்காக, பி-40 தரப்பு மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை அரசு சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் மூலம் நேரடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார் குணராஜ்.

பிகேஆர் கட்சியில், குணராஜ் தேசிய உதவித் தலைவராக புதிய பரிமாணம் பெற்றால், அது அவரின் மக்கள் சேவைக்கு உந்துதலாக இருக்கும் என்று செந்தோசா சட்டமன்றத் தொகுதி மக்கள் சேவை மையம் தெரிவிக்கிறது.

அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் பாராட்டும் வகையில் தொடர்ந்து மக்கள் பணியாற்றிவரும் மக்கள் தலைவர் டாக்டர் ஜி.குணராஜ், பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பொறுப்பை நோக்கி முன்னேறி வருகிறார்.

அரசு, பி40- தரப்பு மக்கள் என்று வகைப்படுத்தியுள்ள பிரிவில், இந்தியர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். மக்கள் தொகையில், மூன்றாவது இடத்தில் இருந்தாலும், பி-40 பிரிவில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

இந்தத் தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்தாலும் அவை சம்பந்தப்பட்ட மக்களுக்கு முழு அளவில் சென்றடைவதில்லை. இதைத் தவிர்ப்பதற்காக, பி-40 தரப்பு மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை அரசு சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் மூலம் நேரடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார் குணராஜ்.

பிகேஆர் கட்சியில், குணராஜ் தேசிய உதவித் தலைவராக புதிய பரிமாணம் பெற்றால், அது அவரின் மக்கள் சேவைக்கு உந்துதலாக இருக்கும் என்று செந்தோசா சட்டமன்றத் தொகுதி மக்கள் சேவை மையம் தெரிவிக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles