
கோவிட் தொற்றால் எல்லைகள் மூடப்பட்டதால் ஈராண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோகூர்-சிங்கப்பூர் இடையிலான Shuttle ரயில் சேவையை, KTMB நிறுவனம் இன்று மீண்டும் தொடங்கியது.
அந்த ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர் Datuk Seri Dr. Wee Ka Siong தொடக்கி வைத்தார். தினசரி ஜோகூர் பாரு Sentral-லில் இருந்து சிங்கப்பூர் Woodlands இடையில் அதிகாலை 5:00 மணி முதல் இரவு 11: 45 மணி வரையில் 31 ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தச் சேவையை ஒரு நாளில் ஏறக்குறைய 7,000 பேர் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
