
மனநிலை பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் ஆடவர், மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றினால் மனம் கொதிப்படைந்து, தாங்கள் வசித்த சொந்த வீட்டிற்கு தீ வைத்ததோடு, தீப்புண் காயங்களுக்கும் இலக்கானார்.
சபா, Tambunan மாவட்டத்தில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் 62 வயதான ஆடவருக்கு , உடலில் 40 விழுக்காடு தீப்புண் காயங்கள் ஏற்பட்டதாக, Keningau மாவட்ட போலீஸ் தலைவர் Nor Rafidah Kasim தெரிவித்தார்.
நேற்றிரவு மணி பத்தரை அளவில் நிகழ்ந்த அந்த தீ விபத்தில் அந்த ஆடவரின் வீடும், காரும் அழிந்ததாகவும் அவர் கூறினார்.
