
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலை மறைக்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் ஓர் அரசு சாரா அமைப்பும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் கூட்டணி- Ikhlas-ம் இன்று போலீசில் புகார் அளித்துள்ளன.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிப்பதன் தொடர்பில் வங்காள தேச ஆளனுப்பு முனையங்களை உறுதிசெய்த விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடமாக சரவணன் செயல்பட்டுள்ளார் என்று இன்று பகலில் டாங் வாங்கி காவல் நிலையத்தின் புகார் அளித்தபின் Ikhlas தலைவர் Mohd Ridzuan Abdullah தெரிவித்துள்ளார்.
