
ஒரு இந்தியக் குடும்பம் ஐந்து பிள்ளைகளுடன் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் காட்சி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குடும்பம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைக்கு உதவ காப்பார் கவுன்சிலர் மதுரைவீரன்,செமந்தா கிராமத் தலைவர் செல்வா, காப்பார் கெஅடிலான் மகளிர் பிரிவு தலைவி லட்சுமி ஆகியோர் நேரில் சென்று பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.
பந்திங்கைச் சேர்ந்த அரசு சார்பற்ற இயக்கம் இவர்களுக்கு ஒரு வீட்டையும் பிள்ளைகள் படிப்பதற்கு அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டது.
மேலும் குடும்பத் தலைவருக்கு 1,800 வெள்ளியில் வேலையும் கொடுக்க முன்வந்தது.
ஆனால், இந்த குடும்பம் இந்த வாய்ப்பை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது பெரும் வேதனையாகும்.
