
கோவிட் -19 தொற்றைக் கையாண்டு, “மலேசியாவை முன்னேற்ற ஒரே வழி”, மக்களவையை மீண்டும் கூட்டுவதுதான் என்று அஸலினா ஓஸ்மான் குறிப்பிட்டார்
தொற்றுநோய் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி 50 விழுக்காட்டை அடையும் வரை, எந்தவிதமான நம்பிக்கையற்றத் தீர்மானத்தையும் மக்களவையில் கொண்டு வரக்கூடாது என்றும் மக்களவை துணை சபாநாயகரான அவர் பரிந்துரைத்தார்.
எந்தவொரு பொதுத் தேர்தலும் நடத்தப்படக்கூடாது, அதற்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்த ஓர் அவசர அமைச்சரவையுடன், ஒரு தற்காலிக அவசரகால அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தார்
