
மக்கள் தாங்கள் விரும்பும் தடுப்பூசி வகையைத் தேர்வு செய்ய முடியும் என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
மைசெஜாத்தெரா விண்ணப்பத்தின் மூலம் பொதுமக்களுக்கு அந்தத் தேர்வை வழங்க அவரது தரப்பு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
“மை.எஸ்.ஜே. அமைப்பு மூலம், பொதுமக்கள் அவர்கள் பெற விரும்பும் தடுப்பூசியைத் தேர்வு செய்யக்கூடிய வசதியை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், இது விரைவில் மேம்படுத்தப்படும்,” என்று அவர் இன்று தெரிவித்தார்.
