
தம்மீது கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக மலாக்கா முதலமைச்சர் Sulaiman Md Ali (சுலைமான் மாட் அலி) தெரிவித்தார்.
ஜூலை 25ஆம் தேதி கூடவிருக்கும் சட்டமன்றத் தொடரில் மலாக்க அம்னோ தலைவரும் தஞ்சோங் பிடாரா சட்ட மன்ற உறுப்பினருமான Ab Rauf Yusoh அப்துல் ராஃவுப் யூசோ அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிகிறது.
பல சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தமக்கு ஆதரவைத் திரட்டி வரும் அவர், அது பற்றிக் கேட்டபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
