
1எம்டிபி பண மோசடி வழக்கை சுமுகமாகத் திர்த்துக் கொள்ள ஜோ லோ அரசுக்கு 150 கோடி ரிங்கிட்டை வழங்க முன் வந்ததாகத் செய்தி உலா வருகிறது.
அதனை முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலி மத்தியஸ்தராகச் செயல்பட்டதாகவும் ஆனால், அதனை அரசு ஏற்கவில்லை என்றும் தெரியவருகிறது.
நஜிப்பை தம் வலையில் சிக்க வைத்து அவரை ஏமாற்றி, பல கோடி ரிங்கிட்டை கொள்ளையடித்து இப்போது ஜோ தலைமறைவாக ஓடி ஒளிந்து வருகிறார்.
அவரின் தூண்டுதலின் பேரில் நஜிப் ரசாக் பல வழக்குகளுக்காக நீதிமன்றங்களை ஏறி இறங்கி வரும் வேளையில், அவரை வைத்துச் சம்பாதித்த ஜோ லோ சுதந்திரமாக உலகைச் சுற்றி வருவது வேடிக்கையான செய்தியாகும்.
