
பெஞ்சானா கெர்ஜாயா எனும் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தைப் பயன்படுத்தி போலியாகச் சமர்ப்பிக்கப்பட்ட 42.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான விண்ணப்பங்களை சொக்சோ தடுத்து நிறுத்தியுள்ளது.முதலாளிகளும் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கழகங்களும் இத்திட்டத்தில் முறைகேடு செய்ததாகவும், பெறப்பட்ட நிதியில் மோசடி செய்வதாகவும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தங்களின் நிறுவனங்களில் தொழிலாளர்களைச் சேர்ப்பதற்காக பல நிறுவனங்கள் பொய்யான தகவலைத் தந்து பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டதாக சொக்சோவின் செயல்முறை தலைவர் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
பெஞ்சானா கெர்ஜாயா திட்டத்தின் வாயிலாக இதுவரை 327,789 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய 45,379 முதலாளிகளுக்கு மொத்தம் 234 கோடி ரிங்கிட்டை சொக்சோ வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
