
கட்சி தாவலைத் தடுக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. அதற்கு 209 நாடாளுமன்ற உறுபினர்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அது கூட்டரசில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசுகள் அச்சட்டத்தை அமல்படுத்த விரும்பினால், மாநில சட்டமன்றங்களில் அச்சட்டத் திருத்தத்தைச் செய்ய வேண்டும்,.சபா, சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் மாநிலங்கள் அச்சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருவதாக சட்டத் துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபார் தெரிவித்தார்.
