
இங்கிலாந்து, பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் முகமட் அனிக் மலேசியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்ற பெருமையை அடைந்தார். இந்தப் பதக்கத்தை நாட்டுக்கும் தமது குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்தார். அதனை பெற்றுத் தந்த இறைவனுக்கும் தமது நன்றியை அவர் தெரிவித்தார். இப்போட்டியில் மலேசியாவுக்கு இன்னொரு தங்கப் பதக்கம் 61 கிலோ பளு தூக்கும் வீரர் முகமட் அஸ்னில் பிடின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
