
15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் தாம் அரசியலில் இருந்து விலகப் போவதாக முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார். தமது உடல்நலம் இப்போது சிறப்பாக இருப்பதாகவும் இனி குடும்பத்துடன் ஓய்வைக் கழிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால், கட்சிக்கும் மக்களுக்கும் உழைக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் முஹிடின் தெரிவித்தார்.
