25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் அல்ல

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் தான் காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த மாத தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் கடும் கொந்தளிப்புடன் அதிபர் மாளிகை மற்றும் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். முதலில் மாலத்தீவு சென்ற அவர், பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் விசாவில் சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்ப உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களை தூண்டி விடும். அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. முன்னாள் அதிபர் கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை. ஒரு வேளை அவர் நாடு திரும்பினால் அது, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் எரிந்து கொண்டு இருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்” என கூறினார். இதனிடையே கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில் அவரது சகோதரர்களான மஹிந்தா ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் ஜூலை 28-ந்தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்து அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த தடை ஆகஸ்டு 2-ந்தேதி வரை நீடிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles