
பொருட்களை வாங்கி செல்ல இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவாகரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறை அமைச்சின் அமலாக்க அதிகாரிகள், போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனைகளின் போது இத்தகையோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
கடந்த புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்ட இரண்டு மணி நேர வரம்பு சோதனை நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் உள்ள வர்த்தக மையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
