
தமது 18 வயது சொந்த மகளை மானபங்கம் செய்த 45 வயது தந்தைக்கு
புக்கிட்மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏழு நாள் தடுப்புக்கு காவல்
வழங்கி உத்தரவிட்டது. மகள் கொடுத்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து
நேற்று முன் தினம் மாலை 4.45 மணியளவில்,புக்கிட் தெங்கா பகுதியில்
அவனை போலீசார்கைது செய்தனர்.12 வயதிலிருந்து தாம் இந்த
கொடுமையை அனுபவித்து வந்துள்ளதாக அவர்த மது போலீஸ் புகாரில்
தெரிவித்துள்ளார்.தமது பெற்றோரின் குடும்ப வாழ்க்கையில் எந்தவொரு
பிரச்சனையும் ஏற்படக் கூடாது என கருதியதால் இவ்வளவு காலமாகஇந்த
வேதனையை வெளியில் சொல்லவில்லையென,எஸ்பிஎம் தேர்வு
முடிவுக்காக காத்திருக்கும்அவர் கூறினார்.
