
எஸ்ஆர்சி வழக்கில் நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட 21 கோடி ரிங்கிட் அபராதத் தொகையை அவர் தமது சிறைத் தண்டனை காலமான 12 ஆண்டுகளில் செலுத்தலாம் என வழக்கறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். அந்தத் தொகையை அவரின் சிறைத் தண்டனை காலத்தில் ஏதாவதொரு சமயத்தில் மொத்தமாகவும் செலுத்தலாம் என வழக்கறிஞர் Mohamed Haniff Khatri Abdulla (முகமட் ஹனிஃப் கத்ரி அப்துல்ல) தெரிவித்தார். இந்நிலையில், வழக்கறிஞர் விஷ்வநாதன் கூறும்போது, அந்தக் தொகையை நஜிப் தவணை முறையிலும் செலுத்த வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டார்.



