
ஜாஃப்னா(சிலோன்) தமிழர்கள் நாட்டின் மேம்பாட்டுக்கு அளப்பரிய சேவையை வழங்கியிருப்பது வரலாறாகும் என்று பேராக் சுல்தான், Sultan Nazrin Shah (சுல்தான் நஸ்ரின் ஷா) குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் ஜஃப்னாவில் இருந்து வந்தவர்கள்’ என்று எழுத்தாளர் இந்திரா ராணி லாவன் ஈஸ்வரன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய சுல்தான் நஸ்ரின் ஷா, அவ்வாறு குறிப்பிட்டார்.
ஆங்கிலத்தில் புலமைமிக்க ஜாஃப்னா தமிழர்கள் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, அரசு இலாகா அதிகாரிகளாக, ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர்களாக, தொழில் முனைவர்களாகவும் பெயர் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
1890களில் மலேசியாவுக்கு வந்த சிலோன் தமிழர்கள் நாடு முழுமையும் உள்ள பள்ளிகளில் குறிப்பாக ஆங்கில ஆசிரியர்களாகப் பணியாற்றி கல்விச் சேவையை வழங்கியது நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்து



