
உள்ளரங்குகளில் முகக் கவசத்தை அணியாமலிருக்கும் விதிமுறையை பரிசீலனை செய்ய வேண்டுமென மலேசிய மருத்துவக் கழகத்தின் தலைவர் டாக்டர் கோ கார் சாய் கேட்டுக் கொண்டார்.
தேசிய மீட்புக் குழுத் தலைவர் முஹிடின் யாசின் கூறும்போது, தற்போது கோவிட்டின் தாக்கம் குறைந்து பாதிக்கப்படுவோர், மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளதால் சுகாதார அமைச்சு அதனைப் பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
ஆகவே, பேருந்து பயணிகள், மருத்துவமனை நோயாளிகள், பராமரிப்பு இல்லங்கள், முதியோர் இல்லங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் முகக் கவசத்தை அணியத் தேவையில்லை என்று பரிந்துரைக்கப்படுகிறது.
