
ஜனநாயகத்தை வரையறுக்கும் தூணாக பத்திரிகைகள் விளங்குவதால் நாட்டின் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை அரசியல்வாதிகள் தடுக்கும் போக்கு மலையேறிவிட்டதாக கெப்போங் எம்பி லிம் லிப் எங் நினைவுறுத்தியுள்ளார்.
அம்னோவின் சிறப்புக் கூட்டத்தில் உள் விவராங்களை வெளிப்படுத்தியிருக்கும் மலேசியா கினி, ஆஸ்ட்ரோ அவானி ஆகியவை 25 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டுமென்று அம்னோ கடிதம் எழுதியிருப்பது வேண்டத் தகாதது என அவர் சாடினார்.
இதற்கு முன்னர், இதே போன்ற வழக்கில் மேல் முறையீட்டு நீதிமன்றம் அரசியல் கட்சிகள் இழப்பீடு கோரி வழக்கைத் தாக்கல் செய்ய அனுமதியில்லை என்ற தீர்ப்பினை அம்னோ பின்பற்றும்படி லிம் லிப் எங் கேட்டுக் கொண்டார்.
