
நஜிப் ரசாக்கின் வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் நடந்து கொண்ட விதம் பற்றி வழக்கறிஞர் மன்றத் தலைவர் விமர்சித்ததற்கு மன்னிப்பு கோர வேண்டுமென வழக்கறிஞர் Zaid Ibrahim (ஸைட் இப்ராஹிம்) எச்சரித்துள்ளார்.
மன்னிப்பு கேட்கத் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் மிரட்டுவதால், நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என வழக்கறிஞர் மன்றத் தலைவர் Karen Siah (கேரன் சியா) தெரிவித்தார்.
அவரை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தமது வழக்கறிஞர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
