
நஜிப் ரசாக், ரோஸமா மன்சோர் ஆகியோரின் ஊழல் வழக்குகளின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, அரசியல்வாதிகளின் ஊழல் முறைகேட்டால் சரிந்துள்ள நாட்டின் நற்பெயர் மீண்டு வந்துள்ளதாக சமூக இயக்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
இன்னும் பல அரசியல்வாதிகளின் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அதில் நீதித்துறை எவ்வித அச்சுறுத்தலுக்கும் விமர்சனத்திற்கும் பின்வாங்காமல் கடமையை ஆற்ற வேண்டுமென சமூக அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
இந்தத் தீர்ப்பானது அதிகாரம் ஆள்பலம் கொண்ட அரசியல்வாதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதைப் புலப்படுத்துவதாகத் தெரிவிக்கின்றன.
இதில் நடந்துள்ள நல்ல காரியம் என்னவெனில், அரசு இந்த இரு வழக்குகளிலும் தலையீடு செய்யாமல் சட்டம் தனது கடமையைச் செய்ய விட்டு விட்டதே ஆகும்.
