
1எம்டிபி தணிக்கை அறிக்கையில் திருத்தம் செய்ய நஜிப் ரசாக் உத்தரவிட்டதாக முன்னாள் தேசிய தணிக்கையாளர் Ambrin Buang )அம்ப்ரின் புவாங்) எம்ஏசிசி விசாரணையில் தெரிவித்ததாகப் புலன் விசாரணை அதிகாரி Hanif Lami (ஹனிஃப் லாமி) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தணிக்கை அறிக்கையில் திருத்தம் செய்ததாக நஜிப்பின் மீதும், அவருக்குத் தூண்டுதலாக இருந்த 1எம்டிபியின் முன்னாள் செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமியின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2016 பிப்ரவரி 24ஆம் தேதி முக்கிய அதிகாரிகள் நஜிப்பைச் சந்தித்துபோது, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அம்ப்ரின் புவாங் தெரிவித்தார்.
அதன் பின்னர், திருத்தப்பட்ட தணிக்கை அறிக்கை நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவிடம் தாக்கல் செய்யப்பட்டது.
