
சரவாக் உட்புறப் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரக் குத்தகையில் கையூட்டு வாங்கிய குற்றச்சாட்டில் தமது தாயாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானதே என ரோஸ்மாவின் முதல் கணவருக்குப் பிறந்த புதல்வி Asreen Ahmad (அஷ்ரீன் அமாட் )குறிப்பிட்டார்.
பிரபல சமையல் கலை நிபுணர் ஒருவரை மணந்து கொண்டு தாயாரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வரும் அஷ்ரீன், கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பினை தாம் மதிப்பதாகவும் அது எந்த அச்சுறுத்தலுக்கும் விமர்சனத்திற்கும் அசராது சரியான தீர்ப்பை வழங்கியிருப்பது நாட்டில் நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தவறு செய்தவர்கள் அதன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
