
நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தடுப்பூசி மையத்தை அமைக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கேசவன் கேட்டுக்கொண்டார்.
இங்கு ஒரு லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இங்குள்ள மக்களுக்கு விரைந்து தடுப்புசி செலுத்த கண்டிப்பாக ஒரு தடுப்பூசி மையத்தை சுகாதார அமைச்சு ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார். தற்போது இங்குள்ள மக்கள் 40 கிலோ மீட்டரை கடந்து கோலாகங்சார் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவர்களின் சுமையை குறைக்க சுங்கை சிப்புட் மக்கள் பாதுகாப்புடன் வாழ தடுப்புசி மையத்தை உடனடியாக அமைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்- Image Credit : Moganraj Villavan
